பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

Update: 2023-02-26 11:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூர் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 2 மாதங்களை கடந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்