கழிவறை வசதி வேண்டும்

Update: 2023-02-26 11:45 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை பஸ் நிலையத்திற்கு தினமும் எராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் பஸ் நிலைய பகுதியிலேயே இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்