மீண்டும் ஆக்கிரமிப்பு

Update: 2023-02-22 14:44 GMT

மீண்டும் ஆக்கிரமிப்பு

தாராபுரம் நகராட்சி கடைவீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கு வடிகால் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளன .குறிப்பாக கழிவுநீர் கால்வாய் மேல் ஆக்கிரமிக்கப்பட்டு பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில்செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீண்டும் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

=======

முத்து,தாராபுரம்.

72997 68559

மேலும் செய்திகள்