பணிகள் விரைந்து முடிக்கப்படுமா ?

Update: 2023-02-19 17:24 GMT


நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் குத்தாங்கல் மேடு பகுதியில் மோகனூர் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு தடுப்பும் கட்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் பணி முடிவடையாததால் வயதானவர்கள், குழந்தைகள் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விடுத்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜாபாண்டி, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்