குரங்குகள் தொல்லை

Update: 2023-02-19 17:21 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் சித்தர் கோவில் வனப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவு தேடி அத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் கிழங்கு மில்களுக்குள் புகுந்து உணவு தேடி பொருட்களை நாசம் செய்கின்றன. மேலும், ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் துரத்துகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் வட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நரசிம்மன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்