கரூர் மாவட்டம், முத்தனூரில்150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தனூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த பழைய சுகாதார வளாகம் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இடிந்து விட்டது. இதனால் சுகாதார வளாகம் இன்றி பெண்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முத்தனூரில் பெண்களுக்கான புதிய சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.