கோவை அவினாசி ரோடு மரக்கடை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மரக்கன்று முளைத்து உள்ளது. இது நாளுக்குநாள் வளர்ந்து வருவதால், சுவர் வலுவிழந்து பழுதடையும் நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த மரக்கன்றை வெட்டி அகற்ற வேண்டும்.