செங்கல்பட்டு மாவட்டம் ராஜகீழ்பாக்கம் கௌசிக் குடியிருப்பு முதல் தெருவில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தெருவில் நடமாடும் பன்றிகளால் தெருவே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால் தெருவில் நடமாடவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவை ஆக்கிரமித்துள்ள பன்றிகளை அகற்ற மாநாராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமா?