மாணவர்களின் நலன் கேள்விக்குறி

Update: 2023-02-15 12:40 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பூலாங்குடிகாலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சிதிலமடைந்த சமையற்கூடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் புதிய சமையற்கூடம் கட்டப்படாததால் திறந்த வெளியில் மதிய உணவு சமைக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 200 குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்