பொது கழிப்பறை தேவை

Update: 2023-02-15 08:48 GMT

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் பலர் கோவிலிலேயே தங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு பொது கழிப்பறை அமைக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி அந்த பகுதியில் பொது கழிப்பறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்