கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர். விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை காவிரி ஆற்று பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கால்நடைகள் மேய்ந்த பிறகு கால்நடைகளை ஓட்டி செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முடித்துள்ளது. இந்த சீமைக்கருவேல மரத்தில் உள்ள காய்கள் கீழே விழுந்து அதை கால்நடைகள் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு மலட்டு தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.