அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.