நூலகம் தரம் உயர்த்தப்படுமா?

Update: 2023-02-05 17:48 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரில் பொது நூலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பொதுமக்கள் மாணவர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு 2 டேபிள், 2 பெஞ்ச் மட்டுமே போடப்பட்டுள்ளது. தரைதளம், மேல்தளம் என 2 அறைகள் இருந்தும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நூலகத்திற்கு வருவோர் செல்போன்களில் பேசுவதால் பிற வாசகர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இங்கு செல்போன் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நூலகத்தை தரம் உயர்த்தத வேண்டும்.

மேலும் செய்திகள்