பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை தடுக்க இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.