சிரமத்தை ஏற்படுத்தும் மயான கொட்டகை

Update: 2023-01-29 11:54 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி, பெரியபனையூரில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் தனியாக சிமெண்டு ஆஸ்பெட்டாஸ் மூலம் சிறிய மயான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயான கொட்டகை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் ஓடுகள் உடைந்துள்ளதால் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்