பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

Update: 2023-01-29 09:10 GMT

கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரில் மாநகராட்சி பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிப்பதோடு மதுப்பிரியர்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்