கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சின்னவாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.