தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-25 14:53 GMT

வெள்ளாற்றின் குறுக்கே கீழக்குடிக்காடு கிராமத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கிழுமத்தூர்- கிழுமத்தூர் குடிக்காடு, அத்தியூர், கைப்பெரம்பலூர், வயலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பாசன ஏரிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்காலின் தடுப்புச்சுவரில், ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீரானது மீண்டும் ஆற்றுக்கே செல்கிறது. இதனால் பாசன ஏரிகளுக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டத்தை பாதிக்கும் நிலை உள்ளது. ஆகையினால் உரிய நிதி ஒதுக்கி உடைப்பை சீர்செய்வதோடு, தடுப்புச்சுவரை புதுப்பிக்கவும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்