பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக இப்பள்ளி அருகே கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.