கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,சோளம், மக்காச்சோளம் ,கேழ்வரகு ,கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர்செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் மயில்கள் தானியங்களையும், பயிர் வகைகளையும் கொத்தி நாசப்படுத்தி வருகிறது .இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் மயில்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.