வேகத்தடையால் விபத்து

Update: 2023-01-18 16:03 GMT
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பசுபதிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிக்கு செல்வதற்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் குறுக்கே ஒரு குறிப்பிட்ட சிலர் தேவையற்ற முறையில் வேகத்தடையை உயரமாக அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே தார் சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள வேகத்தடையை அகற்றி விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்