மானிய உரம் வழங்கப்படுவதில்லை; விவசாயிகள் கவலை

Update: 2022-07-19 11:34 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் விவசாயிகளுக்கு முறையான மானிய உரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்னாவல்கோட்டை, காளாச்சேரியில் விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தற்போதைய சூழலில் சாகுபடிக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடிய மானிய உரம் கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி மானிய உரங்கள் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்