தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியிட்டுள்ளது. மழையை ஈர்க்கும் மையங்களாகவும், நீர் நிலைகளின் காவலனாகவும், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணங்களாகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் அய்யனார் கோவில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு 100 நாள் வேலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து, அதனை அவர்களை கொண்டு ஏரி கரைகளில் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு, ஊராட்சி நிர்வாகம் வலியுறத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.