தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-18 12:05 GMT

கோவை இடையர்பாளையம் சிவாஜி காலனி சவுடாம்பிகா நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. தெருவில் கூட்டங்கூட்டமாக உலா வரும் தெருநாய்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்துகிறது. மேலும் இருசக்கர வாகனங்களுக்குள் தெருநாய்கள் ஓடிச்சென்று விழுவதால், அதில் செல்பவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் இந்த தெருநாய்களை பிடிக்க வேண்டும்.


ஆர்.வெங்கட்ராமன், இடையர்பாளையம்

மேலும் செய்திகள்