பன்றிகள் தொல்லை

Update: 2022-07-19 11:07 GMT
திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூரை அடுத்த இரவாஞ்சேரி பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடை, கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால் தெருவீதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக அங்கும், இங்கும் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்