பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியலமைப்பு தலைவர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் அணிவித்த மாலைகள் அகற்றப்படாமல் காய்ந்த நிலையில் காணப்படுவதினால் அம்பேத்கரின் சிலைக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மாலைகளை அகற்றி சிலையை பராமரித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.