பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், சிறுவயலூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் புற்கள் மண்டியும், கதவுகள் இல்லாமலும் உள்ளது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.