முறையாக உணவு வழங்க கோரிக்கை

Update: 2023-01-08 12:32 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் கர்ப்பிணிகளுக்கு தனி கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது மருத்துவ பரிசோதனை- சிகிச்சை தாமதமாகும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மதியம் உணவு சுகாதார நிலையங்களிலேயே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரு சில சுகாதார நிலையங்களில் தாமதமாகும் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் அந்த கர்ப்பிணிகள் பசியுடன் வீடு திரும்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவ்வாய்க்கிழமையில் மருத்துவ பரிசோதனை-சிகிச்சை தாமதமாகும் கா்ப்பிணிகளுக்கு முறையாக இலவச மதிய உணவு வழங்கப்படுகிறதா? என்பதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்