பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் மயானக் கொட்டகை அமைக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு முதற்கட்ட பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடலை எரியூட்ட பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.