பயணிகள் அவதி

Update: 2023-01-08 09:42 GMT

வடகோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு குடிநீர் சரியாக வருவது இல்லை. மேலும் கழிப்பறையும் ஒன்றுதான் உள்ளது. அதுவும் மூடிக்கிடக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் படும் சிரமம் சொல்லி மாளாது. எனவே ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்