அகற்றப்படாத மாலைகள்

Update: 2023-01-04 15:35 GMT

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியலமைப்பு தலைவர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் அணிவித்த மாலைகள் அகற்றப்படாமல் காய்ந்த நிலையில் காணப்படுவதினால் அம்பேத்கரின் சிலைக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காய்ந்த நிலையில் காணப்படும் மாலைகளை அகற்றிவிட்டு அம்பேத்கரின் சிலையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்