உடைப்பு சரிசெய்யப்படுமா?

Update: 2023-01-04 13:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குரும்பாபாளையம் கிராமத்தில் உள்ள புது ஏரியின் மடைப்பகுதியானது சமீபத்தில் பெய்த மழையில் உடைந்தது. அதில் பெரும்பாலான நீர் வெளியேறிவிட்டது. சரி செய்யப்படாமல் இப்படியே இருந்தால் வரும் மழைக்காலங்களில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரி கடுமையாக பாதிக்கக்கூடும். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நீராதாரத்தை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்