மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-01-04 12:47 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை நகரம் மற்றும் பல்வேறு கிராமப்பகுதிகளில் அரசு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது பாட்டில் வாங்கும் மதுப்பிரியர்கள் பலர் பொது இடங்களில் பொதுமக்கள் பயணிக்கும் சாலை மற்றும் தெருக்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர். மது குடிப்பது மட்டுமல்லாமல் பல நேரங்களில் மது பாட்டில்களை அதே இடங்களில் உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் சென்று வரும் பகுதிகளில் மதுபானங்களை குடிப்பவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்