வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-01-04 10:56 GMT

தக்கலை அருகே சாரோட்டில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் நுள்ளிகுளம் அருகில் சாலையோரம் உணவு கழிவுகள் உள்ளிட்டவற்றை இரவு நேரம் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அவற்றை நாய்கள் தூக்கி வந்து சாலையில் போடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் கொட்டப்படுகின்ற உணவு கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்