நோய் பரவும் அபாயம்

Update: 2023-01-04 07:22 GMT

பத்மநாபுரம் அருகே மங்கலம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இதன் எதிரே அமைந்துள்ள சாலையோரத்தில் சிலர் கோழி கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கோழிக்கழிவுகளை அகற்றுவதுடன் அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார், மங்கலம்.

மேலும் செய்திகள்