ஏ.டி.எம்.களில் பணம் தேவை

Update: 2022-07-18 16:53 GMT

கிருஷ்ணகிரி நகரில் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் முறையாக பணம் வைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாமல் உள்ளது. மேலும் பல இடங்களில் பழுதான ஏ.டி.எம். மையங்கள் சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்