பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

Update: 2023-01-01 12:03 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சி புது அம்மாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி கிடந்ததையடுத்து தற்போது பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்