பஸ் நிலையத்தின் காலி இடத்தில் சிறுநீர் கழிக்கும் அவலம்

Update: 2022-07-18 16:03 GMT
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அரசு பஸ் நிலையத்தில் கர்மவீரர் காமராஜரின் முழுஉருவ சிலை உள்ளது. இதன் பின்புறம் நகரசபைக்கு சொந்தமான 2 கடைகள் உபயோகத்தில் இல்லாமல் பாழடைந்துள்ளன. இந்த கடைகளுக்கு அருகே உள்ள காலி இடத்தில் சிலர் சிறுநீர் கழிப்பதும், மதுபானம் அருந்தி பாட்டிலை வீசியும் செல்கின்றனர். இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு அந்தப்பகுதி வரும் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே, நகரசபை நிர்வாகம் காலி இடத்தில் தடுப்பு வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்