கதவு அமைக்கப்பட்டது

Update: 2022-12-25 08:27 GMT

ஆற்றூர் சந்திப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் வாசல் கதவு சேதமடைந்தது. இதனால் கதவின்றி காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு புதிய கதவு அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திைய வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்