பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை இடிந்து விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே 1,300 குடும்ப அட்டைதாரர்களை கொண்டுள்ள வேப்பூரில் 2 ரேஷன் கடைகள் புதிதாக கட்டி கொடுத்து, அவற்றை முழு நேர கடையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.