சிவகங்கை நகராட்சி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.