கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?

Update: 2022-12-18 10:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவுகிறது. இதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்