பன்றிகள், நாய்கள், மாடுகளை பிடிக்க கோரிக்கை

Update: 2022-12-14 12:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம் முழுவதும் அதிக அளவில் பன்றிகள் சுற்றித்திரிகிறது. இதை பிடிப்பதாக ஊராட்சியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தும் இதுவரை பன்றிகள் பிடிக்கப்படவில்லை. இதனால் பன்றிகளால் பரவும் நோய்கள் மழைக்காலமாக இருப்பதால் எளிதில் மனிதர்களை தாக்க கூடும். ஆகவே ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கேப்பாரற்று திரிகின்ற பன்றிகள், நாய்கள், சாலையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிகின்ற மாடுகள் ஆகியவற்றை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்