திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட வேலம்பாளையம் ஏ.வி.பி.ஜே.எஸ். கார்டன் வீதியில் நல்ல தண்ணீர் மெயின் குழாயில் வேலை செய்துவிட்டு குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த ஆபத்தான குழியில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ந. தெய்வராஜ், 15வேலம்பாளையம்.