பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2022-12-11 18:45 GMT

டி.என்.பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூர், வெள்ளித்திருப்பூர் வரை அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக தினமும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்