காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

Update: 2022-12-11 14:13 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஏராளமான நோயாளிகள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்