பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் ஆலமர கன்று வளர்ந்துள்ளது. இந்த மரக்கன்று வளர வளர பாலத்தின் வலு நாளடைவில் செயலிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.