உயரமான தடுப்பு சுவர் வேண்டும்

Update: 2022-12-11 12:24 GMT
கரூர் மாவட்டம், தவுட்டுபாளையம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது காவிரி ஆற்றுப்பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்று பாலம் முதல் நெடுகிலும் உயரமான தடுப்பு சுவர் அமைத்துக் கொடுத்து காவிரி ஆற்றில் வரும் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்