தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-12-11 12:22 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் வடக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை அருகில் இருந்த தண்ணீர் அடிபம்பு பழுதாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த அடிபம்பை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்