வெளியே நடமாட மக்கள் அச்சம்

Update: 2022-12-11 12:21 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், மலைக்கோவில் தெற்கு, மாரீஸ் நகர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும், தனிநபர் வசம் உள்ள வீட்டுமனையிலும் ஏராளமான கருவேல மரங்கள், செடி-கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இவற்றில் இருந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள சாலையில் நடக்க பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்